Category Archives: பங்களிப்பாளர்கள்

ஒவ்வொரு நிரலாளரும் தெரிந்துகொள்ளவேண்டிய திறமூல செய்யறிவு(AI) கருவிகள்

செய்யறிவு(AI) என்பது நமக்குத் தெரிந்தஅளவு நாம் வாழ்கின்ற இந்தஉலகை மாற்றியமைத்துவருகிறது,மேலும் நிரலாளர்களுக்கு, அதைபின்பற்றுவது உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரி்க்கவும் வசதிகளைமேம்படுத்தவும் தகவல்களை விரைவாக அனுப்பவும், நமக்காக பரிசோதனைக்கான குறிமுறைவரிகளை எழுதவும், அவ்வாறான குறிமுறைவரிகளில் உள்ள பாதிப்புகளைக் கண்டறியவும் இது உதவுகிறது. தற்போதைய சூழலில் இணையமானது பல்வேறு கருவிகளை ஏராளமானஅளவில் வழங்குகிறது, ஆனால் அவைகளிலிருந்து சரியானதைதேடிக் கண்டுபிடிப்ப தற்காவே அதிக நேரத்தையும் முயற்சியையும் எடுக்கவேண்டியுள்ளது. எனவே, அவ்வாறானவைகளுள் ஒரு சிறந்த நிரலாளராக மாறுவதற்கான செய்யறிவு(AI) கருவிகளின் பட்டியல் பின்வருமாறு .… Read More »

சில்லுவின் கதை 11. இடைவிடாத தொழில்நுட்ப மேம்பாடுதான் உயிர்மூச்சு

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சில்லுகளைத் தொகுப்பதோடு நிற்காமல் உயர் தொழில்நுட்பத்தில் ஈடுபடத் தைவான் இலட்சியம் 0:00 புனைவு ஆலை இல்லாத (fabless) முறையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள நிகழ்காலத்திற்கு ஒரு சிறிய பயணம் மேற்கொண்டோம். வடிவமைப்பு நிறுவனங்கள் உற்பத்தி வசதிகளில் பெரும் முதலீடு செய்வதற்குப் பதிலாகத் தயாரிப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தப் புனைவு ஆலை இல்லாத முறை… Read More »

ஜாவாஉரைநிரலில் உருவாக்கிகளை பயன்படுத்துவதுக்குறித்து கற்றுக் கொள்வோம்

ஜாவாஉரைநிரல் ஆர்வலர்களே! 👋 – குறிமுறைவரிகளை எழுதிடுகின்ற திறன்களை மேம்ப்படுத்த தயாராக இருக்கின்றீர்களா ?ஆம்எனில் இன்றே, அதற்கான உருவாக்கிகளில் (Generators) மூழ்கிடுவோம் – ஜாவாஉரைநிரலில் இதுஒரு சிறப்பு வகையான செயலியெனகவலைப்பட வேண்டாம், இதுஒன்றும் ராக்கெட்டை பற்றி அறிந்துகொள்வதற்கான ராக்கெட்அறிவியல் அன்று 🚀 வீணான விவாதங்களை விடுத்த நேரடியாக செயலுக்கு வருவோம். உருவாக்கிகள் (Generators) என்றால் என்ன? 🤔 எளிமையான சொற்களில் கூறுவதெனில், உருவாக்கிகள் (Generators)என்பவை தங்களின் செயலை இடைநிறுத்தம்செய்து மீண்டும் தொடங்கி வழக்கமாக செயல்படக்கூடிய செயலிகளாகும்.. தொடக்கத்தில்… Read More »

சில்லுவின் கதை 10. சொந்தப் புனைவு ஆலை இல்லாதத் தயாரிப்பு நிறுவனங்கள்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சில்லு தயாரிக்கும் செயல்முறை உயர்நிலைக் கண்ணோட்டம்  0:30 ஏன் சொந்தப் புனைவு ஆலை இல்லாத (Fabless) தயாரிப்பு நிறுவனம் அவசியம்? இதற்குப் பதில் கிடைக்க, சில்லுகள் தயாரிக்கப்படும் செயல்முறையை முதலில் பார்ப்போம். IC வடிவமைப்பாளர்கள் கேடன்ஸ் (Cadence), மென்டர் கிராபிக்ஸ் (Mentor Graphics), சினாப்சிஸ் (Synopsis) ஆகியவற்றின் EDA – Electronic… Read More »

மூன்று வழிகளில் குவாண்டம் கணினியானது நம் உலகத்தை மாற்றக்கூடும்

குவாண்டம் கணிணி இறுதியாக தயாரானதும், இவ்வுலகம் எண்ணிம புயலால் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த நாள் ஒவ்வொரு வாரமும் மாறிக்கொண்டே இருப்பது போன்று தோன்றினாலும், உண்மை என்னவென்றால், அது கண்டிப்பாக வரப்போகிறது என்பதுதான், மரபுஇயந்திரங்களின் வேலையைப் பன்மடங்கு வேகத்தில் செய்யக்கூடிய இந்த அடுத்த தலைமுறை கணினிகள், நம் உலகின் சில வசதிகளை அடையாளம் காண முடியாத அளவுக்கு மாற்றிவிடும். 3 மறைகுறியாக்கம்செய்தல் குவாண்டம் கணினியானது மறைகுறியாக்கத்தில் மிகப்பெரிய உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் மறைகுறியாக்கப்பட்ட எதையும் –… Read More »

சில்லுவின் கதை 9. GPS க்கு மாற்றாக இந்திய சில்லுவை வடிவமைக்கிறோம்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சில்லுகளின் மிகப்பெரிய ஆற்றலை அமெரிக்க ராணுவ ஆய்வகம் முன்கூட்டியே உணர்ந்தது 0:35 DARPA (Defence Advanced Research Projects Agency) என்பது அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி அமைப்பாகும். சில்லுகளுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். அவர்கள் நிதியளித்த முதல் திட்டங்களில் ஒன்று லின் கான்வே (Lynn Conway) தலைமையில் 1981… Read More »

சில்லுவின் கதை 8. பல தனிப்பயன் சில்லுகளுக்குப் பதில் ஒரு நிரல்படு சில்லு

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) கைவினைஞர் வேலை போலவே அக்காலத்தில் சில்லு வடிவமைப்பும் கையால் செய்யப்பட்டது 0:00 பல்வேறு வகையான தனிப்பயன் வடிவமைப்பு சில்லுகளுக்குப் பதிலாக, தனிப்பயனாக்கக்கூடிய மென்பொருளுடன் கூடிய நிரல்படுத்தக்கூடிய சில்லு என்ற கருத்தை டெட் ஹாஃப் (Ted Hoff) முன்வைத்ததற்காகப் பாராட்டப்படுகிறார். இதைத்தான் நுண்செயலி (microprocessor) என்று சொல்கிறோம். இன்டெல் 4004 தான் முதல்… Read More »

திற மூல கருவிகளின் மூலம் செய்யறிவில்(AI) சாதாரணமானவனாக இருந்து தலைவனாக உயர்ந்திடலாம்

எப்போதாவது, செய்யறிவு(AI) பற்றி அறிய விரும்புகின்றோமா, ஆனால் எங்கு தொடங்குவது என்பது பற்றி தெரியவில்லையா? கவலையேப்பட வேண்டாம் – நம்மைபோன்ற பலர் இந்த செய்யறிவு(AI) கருவிகளைப் பற்றி அறிய விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுக்கு எங்கு,எவ்வாறு தொடங்குவது என்பதுதான் தெரியவில்லை. இந்த வழிகாட்டியில் குறிப்பிடுகின்ற ஐந்து பயனுள்ள திறமூலக்கருவிகளை பயன்படுத்தி செய்யறிவை(AI) கற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளம் செய்திடுக ஏன் திறமூலபயன்பாட்டின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும்? நாம் முதன்முதல் பைக் ஓட்ட கற்றுக்கொண்டது குறித்து சிந்தித்திடுக அதற்காக. பைக்குகளைப் பற்றிய புத்தகத்தைப்… Read More »

சில்லுவின் கதை 7. ஒரு நாட்டின் தரநிலையையே உயர்த்திய தனிநபர்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) எந்தத் தயாரிப்பு தேவை என்று நுகர்வோரால் சொல்ல இயலாது, ஏனெனில் எதைத் தயாரிக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியாது 0:52 புதிய தயாரிப்புகளை உருவாக்கி சந்தையில் வெளியிடுதல் பற்றி சோனி  (Sony) நிறுவனத்தின் தலைவர் அகியோ மோரிட்டா (Akio Morita), “எந்த வகையான தயாரிப்புகள் வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்பதற்குப் பதிலாக… Read More »

மடிக்கணினியில் தேவையில்லாத வசதிகளை தவிர்த்திடுக

தற்போது நம்முடைய வாழ்க்கையை மாற்றுகின்ற வகையிலான வசதிகளுடன் சமீபத்திய சாதனங்களைக் காண்பிக்கின்ற மடிக்கணினி உற்பத்தியாளர்களின் மிகஅதிக அளவிலான விளம்பரங்களின் வெள்ளத்தை காணலாம். அவ்வாறான விளம்பரங்களின் வாயிலாக நமக்கு சிறந்த காட்சி, அதிக சேமிப்பு ,பல்வேறு மென்பொருள் துணை நிரல்கள் தேவை என மிகைப்படுத்தலில் நம்பி நம்மை சிக்கவைப்பது மிகஎளிது. ஆனால் அவையனைத்தும் உண்மையாகவே இருக்கட்டும்: மின்னஞ்சல்களைச் சரிபார்க்கவும், இணையத்தில் உலாவரவும், புதிய ஆவணங்கள் விளக்கக்காட்சிகளை உருவாக்கவும் நம்மில் பெரும்பாலோனருக்கு அவ்வாறான மிகையான வசதிகளுடனான மடிக்கணினி தேவையேயில்லை. அவ்வாறான… Read More »