Tag Archives: Open source

ஆன்டிராய்டு திறன்பேசியில் பாதுகாப்பும் அகவுரிமையும்

கூகிள் விளையாட்டு அங்காடி (Google Play Store) தீங்குநிரல்கள் நிறைந்து, பாதுகாப்பு மற்றும் அகவுரிமைக்கு மிகவும் பாதகமாகிவிட்டது ஆன்டிராய்டு இயங்கு தளத்துடன் சேர்ந்தே கூகிள் அங்காடி வருகிறது, ஆகவே தனியாகப் பதிவிறக்கம் செய்து நிறுவத் தேவை இல்லை. இதில் மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட செயலிகள் உள்ளன. உங்களால் கற்பனை செய்யக்கூடிய எல்லா வேலைகளுக்கும் இதில் செயலிகள் கிடைக்கும். பல இலவசமாகவே கிடைக்கும், சிலவற்றைதான் பணம் கட்டி வாங்க வேண்டும். இப்படி அற்புதமான வசதியிருக்க வேறு எதுவும் யாருக்குத்… Read More »

கணக்கு பதிவியலிற்கான குனுகதா கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு

குனுகதா (GNUKhata) என்பது கட்டற்ற கட்டணமற்ற நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய டேலி (Tally) பயன்பாட்டிற்கு மாற்றான ஒரு கணக்கு பதிவியல் பயன்பாடாகும். இது கணக்கு பதிவியலுடன் கையிருப்பு பொருட்களையும் பராமரித்திடும் ஒரு சிறந்த பயன்பாடாகவும் விளங்குகின்றது. இதனுடைய குனுகதா v5.10 எனும் பதிப்பை மும்பையிலுள்ள Digital Freedom Foundation எனும் நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது. இதில் பேரேடு, இறுதிக் கையிருப்பு, இருப்புநிலைக் குறிப்பு, இலாபநட்டக் கணக்கு ஆகிய அறிக்கைகளை மாதவாரியாக, காலாண்டு வாரியாக, ஆண்டு வாரியாகப்… Read More »

திறந்த மூல வல்லுநர்கள் தேவை மிகவும் அதிகரித்துள்ளது

லினக்ஸ் அறக்கட்டளை மற்றும் டைஸ் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, அடுத்த ஆறு மாதங்களில், பல திறந்த மூல நிபுணர்களைப் பணியமர்த்த வேண்டி வரும் எனப் பெரும்பான்மையான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இதைவிட அதிகமான நிறுவனங்கள் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தங்கள் திறந்த மூல பதவிகளுக்கு நியமனம் செய்ய மெனக்கெடுகின்றனர். இந்த அறிக்கை திறந்த மூல வேலைகளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன என்ற ஒரு தளரா நம்பிக்கையை அளிக்கிறது. டெவ்ஆப்ஸ் (DevOps) மற்றும் செயலிகள் தயாரிக்கும் திறமைகளை வளர்க்க நிறுவனங்கள் மும்முரமாக வேலை செய்கின்றன. முக்கியமாக, சான்றிதழ்களைக் கொண்ட… Read More »

மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்கு திறந்த மூலமாகக் கிடைக்க வேண்டும்

மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வேண்டும் என்று ஐரோப்பிய குழுக்கள் சொல்கின்றன. 141 அமைப்புகளும் 17005 நபர்களும் இந்த வெளிப்படைக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வழி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. ஐரோப்பிய எண்ணிம உரிமை முன்னெடுப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கோர பல நியாயமான காரணங்கள் இருப்பினும் அரசியல்வாதிகளுக்கு இது இன்னும்… Read More »

அமெரிக்காவில் அமோக வளர்ச்சி அடையும் திறந்த மூல வன்பொருள் நிறுவனம்

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவில் வன்பொருள் தயாரிப்பாளர்களில் அதி வேகமாக வளரும் ஒன்றாக ஏடாஃப்ரூட் எப்படி ஆயிற்று? 2005 இல் எம்ஐடி பல்கலைக்கழக பொறியாளர் லிமார் ஃப்ரீடு இதை நிறுவினார். நீங்கள் திறந்த மூல மென்பொருள்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தெரிந்தோ தெரியாமலோ அனேகமாகத் தினமும் பயன்படுத்தி வருவீர்கள். ஆனால் இவர்கள் செய்வது திறந்த மூல வன்பொருள். இந்தத் தயாரிப்பு நிறுவனம் 2013 முதல் 2015 வரை ஏழரை மடங்கு வளர்ச்சியடைந்தது. விற்பனை 200 கோடி ரூபாய்க்கு மேல். பணியாளர்கள் 100 க்கும் மேல். நியூயார்க் மாநகர… Read More »

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு நிதியளிக்கிறது

ஐககிய நாடுகள் சிறுவர் நிதியம் (Unicef) அமைத்துள்ள புதுமைக்கான நிதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிறுவர்களுக்கு திறந்த மூல மென்பொருள் தயாரிக்கும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு உதவுவதே இந்த நிதியின் குறிக்கோள். பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க இந்த நிதி உதவுகிறது. தொகுப்புத் தொடர் பேரேடு (blockchain), தானியங்கி வானூர்தி (UAV), தோற்ற மெய்மை மற்றும் மிகை மெய்மை (virtual and augmented reality), முப்பரிமாண அச்சிடல் (3D printing), பொருட்களின் இணையம் (Internet of Things), இயந்திரக் கற்றல்… Read More »

கூகிள் நிரலாக்கப் போட்டியில் ஹைதராபாத் பள்ளி மாணவர் வெற்றி

2017ஆம் ஆண்டுக்கான கூகிள் நிரலாக்கப் போட்டியில் ஹைதராபாத் பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் மேகந்த் காமகோடி வெற்றி பெற்றார். 78 நாடுகளிலிருந்து சுமார் 3500 மாணவர்கள் இந்தத் திறந்த மூல மென்பொருள் போட்டியில் பங்கேற்றனர். 13 முதல் 17 வயது வரை உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள். இவர்கள் திறந்தமூல திட்டங்களில் கொடுக்கப்பட்ட ஐந்தாறு சிறிய பணிகளைச் செய்து முடிக்க வேண்டும். இவர்களில் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 16 பேர் இந்தியர்கள். ஜூன் மாதத்தில் கலிபோர்னியாவில்… Read More »

உங்கள் முதல் திறந்த மூல பங்களிப்பை ஐந்து நிமிடங்களில் செய்வது எப்படி

உங்கள் நிரலாக்கத் திறன்களை மேம்படுத்த முதல் வழி நிறைய நிரல்கள் எழுதுவதுதான். இரண்டாவது வழி மற்றவர்கள் எழுதிய நிரல்களைப் படிப்பது. திறந்த மூல திட்டங்களில் பங்களிப்பதே இதற்கு மிகச் சிறந்த வழி. நீங்கள் பல்வேறு நிரலாக்கப் பாணிகளைப் பார்ப்பீர்கள். நீங்கள் எழுதும் நிரலைப் பற்றியும் அற்புதமான விமர்சனங்களைப் பெறுவீர்கள். முதல் பங்களிப்புகள் (First Contributions) என்ற இந்த திட்டம் நீங்கள் திறந்த மூல திட்டங்களுக்கு பங்களிப்பு தொடங்க உதவும் திட்டமாகும். உங்கள் திறந்த மூல பயணத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறீர்களா?… Read More »

ட்ரீஸ்டே நகரம் கணினிகளில் திறந்த மூல மென்பொருட்களை நிறுவி இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்குக் கொடுக்கிறது

இத்தாலியில் ட்ரீஸ்டே நகர நிர்வாகம் தாங்கள் பயன்படுத்த முடியாத கணினிகளில் திறந்த மூல மென்பொருட்களை நிறுவி இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறது. Stock market building in Trieste ஒரு கணினி, கணினித்திரை, விசைப்பலகை மற்றும் தேவையான மின் இணைப்பான்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இக்கணினிகளில் கட்டற்ற திறந்த மூல மென்பொருட்கள் மட்டுமே நிறுவப்பட்டிருக்கும். முன்னர் கணினிகளைப் பெற்றுக் கொண்டவர்களின் பின்னூட்டத்தைப் பொறுத்து இந்த திறந்த மூல மென்பொருட்கள் மாறுபடலாம். பெற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்துவதற்கு அடிப்படை வழிமுறைகளுடன் சுருக்கக்… Read More »

R – அறிமுகம்

R என்றால் என்ன ? R ஒரு திறமூல, GNU திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் நிரல் மொழி ஆகும். இது 1995ஆம் ஆண்டு Martin Maechler மற்றும் Ross and Robert அவர்களால் உருவாக்கப்பட்டது.  R தரவு பகுப்பாய்வு மற்றும் புள்ளிவிவர கணக்கியலுக்கு ஏற்ற மொழியாக பெரிதும் பயன்படுகிறது. ஏன் R ? அண்மை கால்ஙகளில் தரவு ஆய்வியல் மற்றும் அறிவியல் சார்ந்த மொழிகள் நிரலாளர்களிடையே ஏற்றம் பெற்று வருகிறது. அவ்வகையில் R நிரல் மொழி பெரு… Read More »