Category Archives: Ebooks

சோவியத் ரஷ்யா பதிப்பக மின்னூல்கள் வெளியீடு

1960 முதல் 1990 வரை சோவியத் ரஷ்யாவில் இருந்து பல்வேறு பதிப்பகங்கள் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில், அறிவியல், அரசியல், இலக்கியம், சிறார் இலக்கியம் எனப் பல்துறைகளில் பல நூல்களை வெளியிட்டன. மிர் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் ஆகிய பதிப்பகங்கள் அவற்றுள் முதன்மையானவை. தமிழ்நாடு முழுதும் உள்ள அனைத்து ஊர்கள், கிராமங்கள் தோறும் அவர்களது நடமாடும் விற்பனை நிலைய வண்டிகள், மிகவும் குறைந்த விலையில் அனைத்து அறிவுச் செல்வங்களையும் மக்களுக்கு அள்ளி வழங்கின. சோவியத்… Read More »

கணித்தமிழ் 24 மாநாடு – வெளியீடுகள்

கணித்தமிழ் 24 மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்,சிறப்பு மலரை இங்கே பதிவிறக்கம் செய்க. கணிக்கோவை – கணித்தமிழ்24 மாநாட்டுக் கட்டுரைகள் கணித்தொகை – பன்னாட்டுக் கணித்தமிழ் 24 மாநாடு சிறப்பு மலர்

தொ. பரமசிவன் மின்னூல்கள் தளம் வெளியீடு

தொ. பரமசிவன் அவர்களது நூல்களைத் தொகுத்து மின்னூல்களாக, ஒரு தனி வலைத்தளமாக வெளியிடுகிறோம். thopa.FreeTamilEbooks.com பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (1950 – திசம்பர் 24, 2020) தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி… Read More »

எளிய தமிழில் Pandas – மின்னூல்

Pandas என்பது Python மொழி மூலம் வெள்ளமெனப் பெருகி வரும் தகவல்களை எளிதில் கையாள உதவுகிறது. இந்த நூலைப் படிக்க, பைத்தான் மொழியின் அறிமுகம் அவசியம். பல்வேறு வகைகளில், வடிவங்களில் தகவல் இருப்பதால், அவற்றில் இருந்து தேவையான விவரங்களைப் பெறுவது கடினம். ஆனால் Pandas மூலம், தகவல்களை எளிதில் உருமாற்றி, அவற்றின் பின் உள்ள விவரங்களைப் பெற்று, முக்கிய முடிவுகளை எடுக்கப் பயன்படுத்தலாம். சென்னையில் நடைபெற்று வரும் மூன்றாவது ‘தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2023’ ல்… Read More »

பாடப்பொருளாக “எளிய தமிழில் Robotics” நூல்

ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், மயிலாப்பூர், சென்னை சென்னை மயிலாப்பூரில் விவேகானந்தா கல்லூரி வளாகத்தை ஒட்டி உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், சுமார் 650 அனாதை மற்றும் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, உணவு மற்றும் தங்குமிடத்துடன் சேவை செய்து வருவது பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதன் செயலாளர் சுவாமி சத்யஞானானந்தா. நடமாடும் எந்திரனியல் ஆய்வகம்   அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு எந்திரனியல் (Robotics), பொருட்களின் இணையம் (IoT) போன்ற தொழில்நுட்பங்களை அணுகும்… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 15 – இனிதே துவங்கிய பயணம்

இனிதே துவங்கிய பயணம் மதன் மற்றும் கார்த்திகாவின் திருமணத்திற்கு முன்தைய நாள். காஞ்சிபுரத்தில் மதனின் குடும்பத்தின் சொந்த மண்டபத்தில் மதன் மற்றும் கார்த்திகாவின் ரிஷப்ஷன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேடையில் பட்டு வேட்டியுடன் மதனும் தங்கநிற பட்டுப்புடவையில் கார்த்திகாவும் நின்றிருந்தனர். கயலும் குருவும் கார்த்திகா வீட்டினரையும் தன்வீட்டினரையும் கவனித்துக் கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் சுரேஷும் தீப்தியும் விருந்தினர்களுக்கு என்ன வேண்டும் என்று கவனித்துக் கொண்டிருந்தனர். மதனின் தங்கை மதன் வீட்டாரை கவனிக்க பம்பரம் போல் சுற்றி கொண்டிருந்தாள். வழக்கம்… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 14 – உடன்கட்டை

உடன்கட்டை அன்று வெள்ளிக்கிழமை, சுரேஷ் மற்றும் தீப்தியின் திருமனத்திற்கு முந்தைய நாள். சுரேஷின் பார்ம் அவுஸ் அவன் திருமனத்திற்கு பிரம்மாண்டமாக தயாராகிக்கொண்டிருந்தது. அவன் பார்ம் அவுஸ் சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் கோவலம் கடற்கரையை தாண்டி ஒரு இடத்தில் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் சவுக்கு மரங்களை கொண்டு முழுவதும் காம்பவுன்ட் சுவர்கள் எழுப்பி அமைக்கப்பட்டிருந்தது. ஈசிஆர் ரோட்டில் இருந்து சுரேஷின் பார்ம் அவுஸ்ஸுக்கு சொன்னையிலிருந்து பாண்டிக்கு போகும் திசையில் இடதுபுறம் திரும்பி ஐநூறு மீட்டர் சென்றாலே வந்துவிடும்.… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 13 – அந்த ஒரு நம்பர்

அந்த ஒரு நம்பர் காலை நான்கு மணி, ‘எந்திரா டைமாச்சு’ மதன் வழக்கம்போல் சுரேஷை எழுப்பினான். இருவரும் குளித்து முடித்துவிட்டு ஹாலுக்கு வந்து அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தனர். தீப்தியும் தன் பைகளை எடுத்துக்கொண்டு மாடியில் இருந்து இறங்கி வந்து சுரேஷுக்கு பக்கத்தில் அமர்ந்தாள். கார்த்திகாவின் தந்தையும் வெளியில் போய் செவ்வாழை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, என்று பல கனிகளை மூன்று பைகளில் போட்டு கொண்டுவந்து மதனிடமும் சுரேஷ் மற்றும் தீப்தி இடமும் கொடுத்தார். ‘எதுக்கு சார் இதெல்லாம்’, மதன்… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 12 – அதையும் தாண்டி புனிதமானது

அதையும் தாண்டி புனிதமானது காரின் முன்னால் பார்த்துக் கொண்டு வந்த மதனுக்கு திடீரென்று ரியர் வியூவ் மிரரை பார்க்க தோன்றியது, யாரும் பார்க்காதவாறு மிரரை பார்க்க கார்த்திகா மதனை பார்த்தவாரே இருந்ததை கண்டான். மதனை பார்த்ததும் கார்த்திகா வேறு இடத்தை பார்க்க தொடங்கினாள். மதன் சிறிய புன்முருவலுடன் மிரரை பார்த்தவாரே இருந்தான். சில நொடிகள் கழித்து கார்த்திகா யாரும் பார்க்காதவாறு மீண்டும் மிரரை பார்க்க, அங்கே மதன் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்தாள். இருவரும் ஒருவரை… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 11 – பதினாறும் பெற்று

பதினாறும் பெற்று அன்று திங்கட்கிழமை, மதியம் உணவு இடைவேளையில் சுரேஷ், தீப்தி, மதன், கார்த்திகா நல்வரும் ஒன்று கூடினர். ‘நேத்தி கயலும் குருவும் வீட்டுக்கு வந்திருந்தாங்க, அம்மாவ பாத்து இன்விடேஷன் கொடுத்தாங்க’ சுரேஷ் ஆரம்பிக்க ‘உங்க வீட்டுக்குமா, எங்க வீட்டுக்கும் போய் அம்மாவ பாத்து இன்விடேஷன் கொடுத்திருக்காங்க, அம்மா போன் பண்ணி சொன்னாங்க’ தீப்தி கூற ‘வர சண்டே மேரேஜ், நீ போறியா இல்ல நாங்க போகட்டுமான்னு எங்க வீட்லயும் கேட்டாங்க’ மதன் கூற ‘போன்ல சொன்ன… Read More »