Tag Archives: கட்டற்ற மென்பொருள்

கணக்கு பதிவியலிற்கான குனுகதா கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு

குனுகதா (GNUKhata) என்பது கட்டற்ற கட்டணமற்ற நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய டேலி (Tally) பயன்பாட்டிற்கு மாற்றான ஒரு கணக்கு பதிவியல் பயன்பாடாகும். இது கணக்கு பதிவியலுடன் கையிருப்பு பொருட்களையும் பராமரித்திடும் ஒரு சிறந்த பயன்பாடாகவும் விளங்குகின்றது. இதனுடைய குனுகதா v5.10 எனும் பதிப்பை மும்பையிலுள்ள Digital Freedom Foundation எனும் நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது. இதில் பேரேடு, இறுதிக் கையிருப்பு, இருப்புநிலைக் குறிப்பு, இலாபநட்டக் கணக்கு ஆகிய அறிக்கைகளை மாதவாரியாக, காலாண்டு வாரியாக, ஆண்டு வாரியாகப்… Read More »

திறந்த மூல வல்லுநர்கள் தேவை மிகவும் அதிகரித்துள்ளது

லினக்ஸ் அறக்கட்டளை மற்றும் டைஸ் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, அடுத்த ஆறு மாதங்களில், பல திறந்த மூல நிபுணர்களைப் பணியமர்த்த வேண்டி வரும் எனப் பெரும்பான்மையான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இதைவிட அதிகமான நிறுவனங்கள் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தங்கள் திறந்த மூல பதவிகளுக்கு நியமனம் செய்ய மெனக்கெடுகின்றனர். இந்த அறிக்கை திறந்த மூல வேலைகளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன என்ற ஒரு தளரா நம்பிக்கையை அளிக்கிறது. டெவ்ஆப்ஸ் (DevOps) மற்றும் செயலிகள் தயாரிக்கும் திறமைகளை வளர்க்க நிறுவனங்கள் மும்முரமாக வேலை செய்கின்றன. முக்கியமாக, சான்றிதழ்களைக் கொண்ட… Read More »

மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்கு திறந்த மூலமாகக் கிடைக்க வேண்டும்

மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வேண்டும் என்று ஐரோப்பிய குழுக்கள் சொல்கின்றன. 141 அமைப்புகளும் 17005 நபர்களும் இந்த வெளிப்படைக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வழி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. ஐரோப்பிய எண்ணிம உரிமை முன்னெடுப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கோர பல நியாயமான காரணங்கள் இருப்பினும் அரசியல்வாதிகளுக்கு இது இன்னும்… Read More »

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு நிதியளிக்கிறது

ஐககிய நாடுகள் சிறுவர் நிதியம் (Unicef) அமைத்துள்ள புதுமைக்கான நிதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிறுவர்களுக்கு திறந்த மூல மென்பொருள் தயாரிக்கும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு உதவுவதே இந்த நிதியின் குறிக்கோள். பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க இந்த நிதி உதவுகிறது. தொகுப்புத் தொடர் பேரேடு (blockchain), தானியங்கி வானூர்தி (UAV), தோற்ற மெய்மை மற்றும் மிகை மெய்மை (virtual and augmented reality), முப்பரிமாண அச்சிடல் (3D printing), பொருட்களின் இணையம் (Internet of Things), இயந்திரக் கற்றல்… Read More »

கூகிள் நிரலாக்கப் போட்டியில் ஹைதராபாத் பள்ளி மாணவர் வெற்றி

2017ஆம் ஆண்டுக்கான கூகிள் நிரலாக்கப் போட்டியில் ஹைதராபாத் பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் மேகந்த் காமகோடி வெற்றி பெற்றார். 78 நாடுகளிலிருந்து சுமார் 3500 மாணவர்கள் இந்தத் திறந்த மூல மென்பொருள் போட்டியில் பங்கேற்றனர். 13 முதல் 17 வயது வரை உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள். இவர்கள் திறந்தமூல திட்டங்களில் கொடுக்கப்பட்ட ஐந்தாறு சிறிய பணிகளைச் செய்து முடிக்க வேண்டும். இவர்களில் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 16 பேர் இந்தியர்கள். ஜூன் மாதத்தில் கலிபோர்னியாவில்… Read More »

உங்கள் முதல் திறந்த மூல பங்களிப்பை ஐந்து நிமிடங்களில் செய்வது எப்படி

உங்கள் நிரலாக்கத் திறன்களை மேம்படுத்த முதல் வழி நிறைய நிரல்கள் எழுதுவதுதான். இரண்டாவது வழி மற்றவர்கள் எழுதிய நிரல்களைப் படிப்பது. திறந்த மூல திட்டங்களில் பங்களிப்பதே இதற்கு மிகச் சிறந்த வழி. நீங்கள் பல்வேறு நிரலாக்கப் பாணிகளைப் பார்ப்பீர்கள். நீங்கள் எழுதும் நிரலைப் பற்றியும் அற்புதமான விமர்சனங்களைப் பெறுவீர்கள். முதல் பங்களிப்புகள் (First Contributions) என்ற இந்த திட்டம் நீங்கள் திறந்த மூல திட்டங்களுக்கு பங்களிப்பு தொடங்க உதவும் திட்டமாகும். உங்கள் திறந்த மூல பயணத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறீர்களா?… Read More »

ட்ரீஸ்டே நகரம் கணினிகளில் திறந்த மூல மென்பொருட்களை நிறுவி இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்குக் கொடுக்கிறது

இத்தாலியில் ட்ரீஸ்டே நகர நிர்வாகம் தாங்கள் பயன்படுத்த முடியாத கணினிகளில் திறந்த மூல மென்பொருட்களை நிறுவி இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறது. Stock market building in Trieste ஒரு கணினி, கணினித்திரை, விசைப்பலகை மற்றும் தேவையான மின் இணைப்பான்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இக்கணினிகளில் கட்டற்ற திறந்த மூல மென்பொருட்கள் மட்டுமே நிறுவப்பட்டிருக்கும். முன்னர் கணினிகளைப் பெற்றுக் கொண்டவர்களின் பின்னூட்டத்தைப் பொறுத்து இந்த திறந்த மூல மென்பொருட்கள் மாறுபடலாம். பெற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்துவதற்கு அடிப்படை வழிமுறைகளுடன் சுருக்கக்… Read More »

மும்பை பள்ளி மைக்ரோசாஃப்ட்-ஐ விட்டு கட்டற்ற திறந்த மூல மென்பொருளுக்கு மாற்றியது

மைக்ரோசாஃப்ட், அடோபி போன்ற தனியுரிம மென்பொருள்களுக்குப் பதிலாகக் கட்டற்ற திறந்த மூல மென்பொருள்களுக்கு (Free and Open Source Software – FOSS) மாற்றம் செய்து மும்பை மஸ்காவுனில் உள்ள செயின்ட் மேரி என்ற அரசு உதவிபெறும் பள்ளி நகரிலேயே முதல் பள்ளியாக இடம் பெற்றது. மைக்ரோசாஃப்ட் இயங்கு தளம் மட்டும்தான் என்று இருக்கக் கூடாது என்றும் செலவைக் குறைக்கும் இலவச திறந்த மூல மென்பொருட்களைப் பயன்படுத்த மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்றும் சமீபத்தில் மராட்டிய மாநில இடைநிலை… Read More »

இலவசம்: கார்ல் ஃபோகல் எழுதிய “திறந்த மூல மென்பொருள் உருவாக்குதல்” புத்தகம்

அரசாங்கங்கள், ஆதாய நோக்கற்ற நிறுவனங்கள், ஆதாயம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நிரலாளர்கள் போன்ற பல வகையான வாடிக்கையாளர்களுடன் திறந்த மூல திட்டங்களை எவ்வாறு தொடங்குவது மற்றும் நடத்துவது ஆகியவை பற்றி கார்ல் ஃபோகல் (Karl Fogel) நிறைய திறந்த மூல ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இவர் எழுதிய “திறந்த மூல மென்பொருள் உருவாக்குதல் – ஒரு கட்டற்ற மென்பொருள் திட்டத்தை வெற்றிகரமாக இயக்குவது எப்படி” என்ற புத்தகத்தை இலவசமாகப் படிக்கலாம். இது திறந்த மூல மென்பொருள்… Read More »

இந்திய அரசாங்கம் திறந்த மூலத்தில் பெரிய அளவில் இறங்கியுள்ளது!

பல்வேறு துறைகளில் ‘திறந்த மூலம், பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு’ தத்துவத்தை ஊக்குவிக்க இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய அரசாங்கம் ஓபன்ஃபோர்ஜ் என்ற அதிகார பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியது. உள்நாட்டிலேயே பராமரிக்கப்படும் இந்த கிட்ஹப் (GitHub) போன்ற புதிய தளத்துக்கு, நாட்டில் உள்ள மின்னாளுகை செயலிகளின் மென்பொருள் சொத்துக்களைப் பாதுகாப்பதும், மீண்டும் பயன்படுத்துவதும் குறிக்கோளாகும். இதற்கான களஞ்சியம் உருவாக்க இதன் குழு திறந்த மூல ஒத்துழைப்பு தளம் டுலீப் (Tuleap) பயன்படுத்தியுள்ளது. மேலிருக்கும் மூடியை எடுத்துப் பார்த்தால் லினக்ஸ், அப்பாச்சி, மைஎஸ்கியூஎல்… Read More »