Author Archives: இரா. அசோகன்

உங்கள் முதல் திறந்த மூல பங்களிப்பை ஐந்து நிமிடங்களில் செய்வது எப்படி

உங்கள் நிரலாக்கத் திறன்களை மேம்படுத்த முதல் வழி நிறைய நிரல்கள் எழுதுவதுதான். இரண்டாவது வழி மற்றவர்கள் எழுதிய நிரல்களைப் படிப்பது. திறந்த மூல திட்டங்களில் பங்களிப்பதே இதற்கு மிகச் சிறந்த வழி. நீங்கள் பல்வேறு நிரலாக்கப் பாணிகளைப் பார்ப்பீர்கள். நீங்கள் எழுதும் நிரலைப் பற்றியும் அற்புதமான விமர்சனங்களைப் பெறுவீர்கள். முதல் பங்களிப்புகள் (First Contributions) என்ற இந்த திட்டம் நீங்கள் திறந்த மூல திட்டங்களுக்கு பங்களிப்பு தொடங்க உதவும் திட்டமாகும். உங்கள் திறந்த மூல பயணத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறீர்களா?… Read More »

ட்ரீஸ்டே நகரம் கணினிகளில் திறந்த மூல மென்பொருட்களை நிறுவி இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்குக் கொடுக்கிறது

இத்தாலியில் ட்ரீஸ்டே நகர நிர்வாகம் தாங்கள் பயன்படுத்த முடியாத கணினிகளில் திறந்த மூல மென்பொருட்களை நிறுவி இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறது. Stock market building in Trieste ஒரு கணினி, கணினித்திரை, விசைப்பலகை மற்றும் தேவையான மின் இணைப்பான்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இக்கணினிகளில் கட்டற்ற திறந்த மூல மென்பொருட்கள் மட்டுமே நிறுவப்பட்டிருக்கும். முன்னர் கணினிகளைப் பெற்றுக் கொண்டவர்களின் பின்னூட்டத்தைப் பொறுத்து இந்த திறந்த மூல மென்பொருட்கள் மாறுபடலாம். பெற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்துவதற்கு அடிப்படை வழிமுறைகளுடன் சுருக்கக்… Read More »

மும்பை பள்ளி மைக்ரோசாஃப்ட்-ஐ விட்டு கட்டற்ற திறந்த மூல மென்பொருளுக்கு மாற்றியது

மைக்ரோசாஃப்ட், அடோபி போன்ற தனியுரிம மென்பொருள்களுக்குப் பதிலாகக் கட்டற்ற திறந்த மூல மென்பொருள்களுக்கு (Free and Open Source Software – FOSS) மாற்றம் செய்து மும்பை மஸ்காவுனில் உள்ள செயின்ட் மேரி என்ற அரசு உதவிபெறும் பள்ளி நகரிலேயே முதல் பள்ளியாக இடம் பெற்றது. மைக்ரோசாஃப்ட் இயங்கு தளம் மட்டும்தான் என்று இருக்கக் கூடாது என்றும் செலவைக் குறைக்கும் இலவச திறந்த மூல மென்பொருட்களைப் பயன்படுத்த மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்றும் சமீபத்தில் மராட்டிய மாநில இடைநிலை… Read More »

இந்திய மொழிகளுக்கு நவீன, திறந்த மூல எழுத்துருக்களை உருவாக்க ஒரு வடிவமைப்பு நிறுவனம் முனைந்துள்ளது

அச்சுக்கலை முக்கியமானது, வடிவமைப்பு செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, இணையம் மற்றும் திறன்பேசி பயனர்களுக்கும்தான். ஆனால் ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தும் இந்த இணைய உலகில், இந்தியாவின் பல வட்டார மொழிகள் இருக்கும் உள்ளடக்கத்தின் ஒரு சிறு பகுதிதான். எனவே, வட்டார மொழிகளில் எவரும் அவ்வளவு கவனம் செலுத்துவது இல்லை. 2013 -லிருந்து, மும்பையைச் சேர்ந்த அச்சுக்கலை கூட்டு இந்த நிலையை மாற்றுவதற்கு வேலை செய்து வருகிறது. குஜராத்தி, குர்முகி, தமிழ் மற்றும் தெலுங்கு முதலான இந்திய மொழிகளுக்கான நவீன… Read More »

தரவு உரிமையாளர்களின் கைகளை வலுப்படுத்துக – ஆதார், ஜிஎஸ்டி தொழில்நுட்ப ஆலோசகர்

ஆதார் திட்டத்தின் பிரதான வடிவமைப்பாளராகவும் தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருப்பவர் பிரமோத் வர்மா. புதிய ஜிஎஸ்டி வரி செலுத்த வழிவகை செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய நிறுவனமாகிய ஜிஎஸ்டி பிணையத்தின் (GSTN) ஆலோசகரும் ஆவார். ஒரு சிறந்த தொழில்நுட்ப நிபுணரான வர்மா பல பொறுப்புகளை ஏற்றுள்ளார். இவர் கல்வியறிவை மேம்படுத்துவதற்கு ஒரு தொழில்நுட்ப தளத்தை உருவாக்கியுள்ள ஏக்ஸ்டெப் (EkStep) என்ற ஆதாய நோக்கமற்ற அமைப்பின் தலைமை தொழில்நுட்ப அலுவலர்; இந்திய தேசிய கட்டணக் கூட்டுத்தாபனத்தின் (National Payments Corporation of… Read More »

இலவசம்: கார்ல் ஃபோகல் எழுதிய “திறந்த மூல மென்பொருள் உருவாக்குதல்” புத்தகம்

அரசாங்கங்கள், ஆதாய நோக்கற்ற நிறுவனங்கள், ஆதாயம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நிரலாளர்கள் போன்ற பல வகையான வாடிக்கையாளர்களுடன் திறந்த மூல திட்டங்களை எவ்வாறு தொடங்குவது மற்றும் நடத்துவது ஆகியவை பற்றி கார்ல் ஃபோகல் (Karl Fogel) நிறைய திறந்த மூல ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இவர் எழுதிய “திறந்த மூல மென்பொருள் உருவாக்குதல் – ஒரு கட்டற்ற மென்பொருள் திட்டத்தை வெற்றிகரமாக இயக்குவது எப்படி” என்ற புத்தகத்தை இலவசமாகப் படிக்கலாம். இது திறந்த மூல மென்பொருள்… Read More »

இந்திய அரசாங்கம் திறந்த மூலத்தில் பெரிய அளவில் இறங்கியுள்ளது!

பல்வேறு துறைகளில் ‘திறந்த மூலம், பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு’ தத்துவத்தை ஊக்குவிக்க இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய அரசாங்கம் ஓபன்ஃபோர்ஜ் என்ற அதிகார பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியது. உள்நாட்டிலேயே பராமரிக்கப்படும் இந்த கிட்ஹப் (GitHub) போன்ற புதிய தளத்துக்கு, நாட்டில் உள்ள மின்னாளுகை செயலிகளின் மென்பொருள் சொத்துக்களைப் பாதுகாப்பதும், மீண்டும் பயன்படுத்துவதும் குறிக்கோளாகும். இதற்கான களஞ்சியம் உருவாக்க இதன் குழு திறந்த மூல ஒத்துழைப்பு தளம் டுலீப் (Tuleap) பயன்படுத்தியுள்ளது. மேலிருக்கும் மூடியை எடுத்துப் பார்த்தால் லினக்ஸ், அப்பாச்சி, மைஎஸ்கியூஎல்… Read More »

டெவோபீடியா: நிரல் பயிலுநர்களுக்கான விக்கிபீடியா இந்தியாவில் உருவாகிறது

தொலைத் தொடர்புத் துறையில் நீண்ட அனுபவம் உள்ள அரவிந்த் பத்மநாபன் சில ஆண்டுகளுக்கு முன்பு பொருட்களின் இணையத்துக்கு (Internet of Things, IoT) ஒரு திறன்பேசி செயலியை உருவாக்க விரும்பினார். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜாவாஸ்கிரிப்ட் கற்றுக்கொண்ட அவர் இணையத்தில் நிரலாக்க மொழியில் முன்னேற்றங்கள் பற்றி ஆராயத் தொடங்கினார். இது செயலியை உருவாக்க அவசியமாக இருந்தது. ரியாக்ட் நேட்டிவ் (React Native) என்னும் தன்னக செயலிகளை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் உணர்ந்தார்.… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 21. திறந்த மூல மென்பொருளை வைத்து வணிகம் செய்வது எப்படி

எவரும் தங்கள் முதல் அனுபவத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். என்னைப் பொருத்தவரை என்னுடைய நிறுவனம் லூசிட்ஒர்க்ஸ் (Lucidworks) 2008 ல் முதல் சுற்று துணிகர முதலீடு பெற்றிருந்தது, எங்கள் முதல் விற்பனையாளர் பணியமர்த்தப்பட்டிருந்தார். அபாச்சி சோலார் (Apache Solr) ல் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு உதவி தேடும் ஒரு வருங்கால வாடிக்கையாளருடன் தொலைபேசி அழைப்பில் பேசக் கூறினர். அழைப்பின் போது, பல சிக்கலான கேள்விகளை வருங்கால வாடிக்கையாளர்கள் என்னிடம் கேட்டார்கள். பேசி முடித்தபின் எல்லாக்… Read More »

கிட்ஹப் இல் ஒரு திறந்த மூல திட்டத்துக்கு எவ்வாறு பங்களிப்பது என்பதை படிப்படியாக விளக்கும் பயிற்சி

கிட்ஹப் (GitHub) இல் திறந்த மூல திட்டத்துக்கு பங்களிப்பது இழு கோரிக்கை (pull request) மூலம் நடைபெறுகிறது. இழு கோரிக்கை என்பது அடிப்படையில் ஒரு குறுநிரல்தான். இது மேலும் தகவலை உள்ளடக்குகிறது மற்றும் உறுப்பினர்கள் அதை வலைத்தளத்தில் விவாதிக்க வழி செய்கிறது. டேவிட் கப்போலா (Davide Coppola) எவ்வாறு பங்களிப்பது என்பதை படிப்படியாக இந்தப் பயிற்சியில் விளக்குகிறார்.  நீங்கள் பங்களிக்க விரும்பும் திட்டத்தை தேர்வு செய்யவும் புதிய பங்களிப்பாளர்களை திட்டத்தில் சேர ஊக்குவிக்க சில நேரங்களில் திட்ட பராமரிப்பாளர்கள்… Read More »