இரண்டாவது தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு – செப் 24,25 – இலயோலா கல்லூரி
விடுதலை – இதை விரும்பாதோர் யார்? விடுதலை விதையைக் கணினிக்குள் விதைக்கும் ஓர் ஒப்பற்ற திருவிழாவே இம்மாநாடு! கட்டற்ற மென்பொருளை மகளிர் முன்னணியிலும் ஆடவர் பின்னணியிலும் நின்று களம் காணும் கணித்தமிழ் மாநாடு! “எது செய்க நாட்டுக்கே எனத் துடித்த சிங்கமே! இன்றே, இன்னே புது நாளை உண்டாக்கித் தமிழ் காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே!” என்னும் பாவேந்தரின் வைர வரிகளை வாழ்வாக்கும் ஒரு நல் தொடக்கம்! கட்டற்ற கணித்தமிழை விரும்பும் அத்துணை நல்லுள்ளங்களும் இதில் அடக்கம்!… Read More »